இலங்கைசெய்திகள்

வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

sathiyamoorthy
Share

வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனாத் தொற்றாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை என்பது பெரிய குறைபாடு ஆகும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக காய்ச்சலோடு சேர்த்து ஏனைய நோய்நிலைமை இருக்கும்போது கட்டாயமாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சில பேர் வீடுகளில் இருந்துகொண்டு தங்களுக்கு தாங்களே சிகிச்சை வழங்கிக்கொண்டு இருந்தாலும் அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்தது.

தொற்று ஏற்பட்ட பின்னர் மூன்று, நான்கு நாள்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது, தங்களைத் தாங்கள் பார்த்துக்கொண்டாலும் சில நாள்களுக்குப் பின்னர் நோய் நிலைமை அதிகரித்து சென்று உடல் செயலிழப்பும் ஏற்படும்.

சில சமயங்களில் இவ்வாறு தாமதித்து வருவதால் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...