sathiyamoorthy
இலங்கைசெய்திகள்

வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

Share

வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனாத் தொற்றாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை என்பது பெரிய குறைபாடு ஆகும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக காய்ச்சலோடு சேர்த்து ஏனைய நோய்நிலைமை இருக்கும்போது கட்டாயமாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சில பேர் வீடுகளில் இருந்துகொண்டு தங்களுக்கு தாங்களே சிகிச்சை வழங்கிக்கொண்டு இருந்தாலும் அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்தது.

தொற்று ஏற்பட்ட பின்னர் மூன்று, நான்கு நாள்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது, தங்களைத் தாங்கள் பார்த்துக்கொண்டாலும் சில நாள்களுக்குப் பின்னர் நோய் நிலைமை அதிகரித்து சென்று உடல் செயலிழப்பும் ஏற்படும்.

சில சமயங்களில் இவ்வாறு தாமதித்து வருவதால் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...