இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் நான்காவது நாளாக நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஞாயிறு பூசையைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆடி மாதம் 9ம் திகதி அரச விமான தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment