7 6
இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழ் மக்கள் பொதுச்சபை

Share

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராக உள்ளதாக மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை பகிரங்கமாக அறிவித்துள்ளது.

குறித்த விடயமானது நேற்று (16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரை கிளிநொச்சி (Kilinochchi) கூட்டுறவு மண்டபத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்படி கூட்டத்தில் சுமார் 200 இற்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்களித்துள்ளனர்.

அத்தோடு, தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம் மற்றும் ரவீந்திரன் இந்திரன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பெருமளவு கேள்விகளை கேட்டதுடன் முடிவில் எல்லா அமைப்புகளும் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...