7 6
இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழ் மக்கள் பொதுச்சபை

Share

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராக உள்ளதாக மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை பகிரங்கமாக அறிவித்துள்ளது.

குறித்த விடயமானது நேற்று (16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரை கிளிநொச்சி (Kilinochchi) கூட்டுறவு மண்டபத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்படி கூட்டத்தில் சுமார் 200 இற்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்களித்துள்ளனர்.

அத்தோடு, தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம் மற்றும் ரவீந்திரன் இந்திரன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பெருமளவு கேள்விகளை கேட்டதுடன் முடிவில் எல்லா அமைப்புகளும் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...