images 6 5
இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Share

கிராம சேவகர்களின் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்குப் புதிய நடைமுறை மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மையற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) அறிவித்துள்ளது.

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளைத் துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாகக் கூறி சில அவசர தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நேரடி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தச் செய்தி போலியானது என்றும், ஜனாதிபதி அலுவலகம் அத்தகைய எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்கள் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...