22 632e977ee2322
இலங்கைசெய்திகள்

2023 இல் பொதுத் தேர்தல்!

Share

2023 மார்ச் மாதத்துக்கு பிறகு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அவசர பொதுத்தேர்தலொன்று நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.

அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற திகதியில் இருந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் அந்த ஏற்பாடு மாற்றப்படவில்லை.

எனவே, 2023 மார்ச் மாதத்துக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிட்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி, அவசர பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வாரென நம்பப்படுகின்றது.

எனினும், முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு மொட்டு கட்சி முன்வைத்த நிபந்தனைகளுள், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படக்கூடாது என்பது பிரதானமானதாகும்.

ஆனால் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மையும் ஏற்பட்டள்ளது. இந்நிலையிலேயே அவசர தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...