24 670108906b173
இலங்கைசெய்திகள்

உயிரிழந்த மகனின் சாதாரண தர பெறுபேற்றை பார்த்து வேதனையில் மரணித்த தந்தை

Share

உயிரிழந்த மகனின் சாதாரண தர பெறுபேற்றை பார்த்து வேதனையில் மரணித்த தந்தை

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த சாதாரண தரப் பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்த தந்தை ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவன் நீர்கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், பரீட்சைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளின் படி குறித்த மாணவன் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

இதனை அடுத்து மகனின் பெறுபேறுகளை அறிந்து வேதனையடைந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 53 வயதுடையவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த தந்தையின் மகன் மே மாதம் இரவு, கட்டான, இட்டகொடெல்ல வீதியில், உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், கார் ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் மகனுக்கு அதிசிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதை அறிந்த தந்தை தனது மகன் உயிருடன் இல்லை என்பதை நினைத்து மிகுந்த மன வேதனையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...