maithripala sirisena 1568543485
செய்திகள்அரசியல்இலங்கை

வர்த்தமானிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை! – மைத்திரி குற்றச்சாட்டு

Share

நல்லாட்சி அரசாங்கத்தில் தான்  ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கையொப்பமிட்ட சில வர்த்தமானி அறிவித்தல்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றநிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத வர்த்தமானி அறிவித்தல்களில் பெரும்பாலானவை சூழல் பாதுகாப்பு கருதி வெளியிட்டவையாகும்.  தற்போதைய அரசாங்கம் மண், மணல் கடத்தலுக்கான அனுமதிபத்திரத்தை நீக்கியமை தமக்கு வியப்பளிப்பதாகவும் அவர் கூறினார்

“நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தேன். மின்சார கம்பத்தை பதிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...