sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

இன்று கூடுகிறது ஜ.ம.ச

Share

தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு இன்று கூடவுள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ,எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும், ஜனாதிபதிமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகர் தேர்வின்போது, தமது கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் களமிறக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார் .

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடவுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ்விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்து ஆராயப்படவுள்ளது.

மத்திய குழுவால் எடுக்கப்படும் முடிவு, குறித்து நாடாளுமன்றக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுவில் ஆராயப்பட்டு இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...