Hotel
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

எரிவாயுத் தட்டுப்பாடு: இழுத்து மூடப்பட்ட 12 ஆயிரம் ஹோட்டல்கள்!!

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 4 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

உணவகங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்கள் இருக்கும் நிலையில், அவற்றில், சுமார் 3 ஆயிரத்து 500 வெதுப்பகங்கள், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.

அதனால், நிவாரணம் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வெதுப்பகங்களும் மூடப்படலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...