tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

Share

காதல் உறவை முறிக்க பெண் ஒருவர் மோசமான செயல்

காதலர் தினமான நேற்றைய தினம் பெண் ஒருவர் தனது கணவரின் உதவியுடன் முன்னாள் காதலனை அடித்து இரண்டு கால்களையும் உடைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை பேணிவந்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் குறித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது பழைய காதலரும் அவருடன் உறவைப் பேணி வந்துள்ளார்.

எனினும், அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பிரச்சினையாக மாறியமையினால் கணவரின் உதவியுடன் தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்து கடற்கரைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் அடித்து உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...