5 39
இலங்கைசெய்திகள்

பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் – கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்

Share

பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் – கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று புத்தளம் பாலவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

34 வயதான மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் என முன்னாள் இராணுவ கொமாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல்வேறு பெயர்களில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கொலையை மேற்கொள்ள ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவின் சடலத்தை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...