27 2
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

Share

நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

இலங்கையில் மீண்டும் கம் உதாவ திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் கம் உதாவ வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்டதாகவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்தத் திட்டத்தை முன்னெடுக்க தவறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீடுகள் இல்லாத, காணி இல்லாத அனைவருக்கும் கம் உதாவ வேலை திட்டத்தின் ஊடாக நலன்கள் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதி வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...