1 9
அரசியல்இலங்கைசெய்திகள்

18 ஆவது நாளாகத் தொடரும் காலிமுகத்திடல் தன்னெழுச்சி!

Share

“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சி, இன, மத, மொழி பேதமின்றி மக்கள் அலையெனத் திரண்டு பங்கேற்று வருகின்றனர்.

இளைஞர் – யுவதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு குறித்த பகுதியில் கூடியிருந்த மக்கள் வெவ்வேறு செயற்பாடுகளின் ஊடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...