tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு கடாபி கொடுத்த பெறுமதியான பரிசு

Share

மகிந்தவுக்கு கடாபி கொடுத்த பெறுமதியான பரிசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு சென்று இரங்கல் செய்தியை வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

லிபியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் செய்தியை பதிவிட்டிருந்தார்.

அங்கு லிபிய தூதரக அதிகாரி ஒருவரிடம், லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேணல் கடாபி இருந்திருந்தால் இன்று லிபிய மக்கள் இவ்வாறானதொரு கதியை சந்தித்திருக்க மாட்டார்கள் என மகிந்த தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் மகிந்த, விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் அங்கு வந்திருந்தனர்.

லிபிய தூதரகத்திற்கான பயணம் குறித்து கேட்டதற்கு, கடாபி இருந்திருந்தால், லிபிய மக்கள் இன்று இவ்வளவு அனாதரவாக இருக்க வேண்டியதில்லை என்று நான் அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் கூறினேன் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது லிபியாவிற்கு சென்றதும், மகிந்தவுக்கு கேணல் கடாபி வழங்கிய வரவேற்பும் பற்றிய கடந்த கால கதைகளும் வெளிவந்துள்ளது.

கடாபி தன்னை மிக உயரிய முறையில் வரவேற்று கடாபியின் நாற்காலியில் அமர்ந்து தோளில் கைபோட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஊடகங்களில் பிரபலமடைந்ததை மகிந்த மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்துள்ளார்.

இதேவேளை கடாபி தனிப்பட்ட முறையில் மகிந்தவுக்கு வழங்கிய சிறப்புப் பரிசு குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடாபி மகிந்தவிற்கு தயாரித்து கொடுத்த மிகவும் பெறுமதியான ரோலெக்ஸ் கைக்கடிகாரமே அந்த பரிசாகும். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடாபி கடிகாரத்துக்கான ஓடரை தனது சொந்த பெயரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் கொடுத்தது பின்னர் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...