law
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!

Share

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என பட்டியலிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உப்பட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம்’ மற்றும் மேலும் மூவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச,முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 13 பேர் இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் வகையில் பகிரங்க தன்மை இன்றியும் பொறுப்புக்கூறலை தவிர்த்து உயர்மட்ட முடிவுகளை எடுத்ததற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான சில விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(1) 2019 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசு வருமானத்தை குறைத்தது.

(2) அந்த வரிச் சலுகையை மீண்டும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது.

3) சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறுவதை தாமதப்படுத்தியது.

(4) ரூபாவின் மதிப்பு தொடர்பாக உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்காதது.

மேற்படி விடயங்கள் குறித்து சம்மந்தப்பட்ட எதிர் மனுதாரர்கள் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...