VideoCapture 20230423 165124
அரசியல்இலங்கைசெய்திகள்

கதவடைப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவு!

Share
தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள்  அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு  எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம்  இடம்பெறும்  கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது அலுவலகத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது 1979 களில் கொண்டுவரப்பட்டது என்றும்,  ஆனால் அப்போது அது தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்றும் இதனால் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்றும், தற்போது கொண்டு வர இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானது  என்றும், இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின்  கீழ் தமிழ் மக்கள் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் இணைந்து போராட வேண்டும் அல்லது குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை   குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தார்கள் என்றும் இனி எதிர்நோக்குவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் இது ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சனை என்பதற்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்உலகம்

ஈரான் பாடசாலைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம்: ஐ.நா.வில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி காட்டம்!

ஈரானியப் பாடசாலை மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டமை...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மோதியதில், கடமையில் இருந்த...

Untitled 11
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி – ஆரம்பப் போட்டிகளில் தோனி பங்கேற்பது சந்தேகம்!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனும்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிசிடிவி கமராவிற்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்: அக்கரைப்பற்றில் இளைஞன் கைது!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் சிசிடிவி (CCTV) கமராவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளைக்...