Ceylon Petroleum Private Carrier Owners Association
செய்திகள்இலங்கை

மீண்டும் முடங்கியது எரிபொருள் விநியோகம்!

Share

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர்.

இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 80% தனியார் தாங்கி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 60 வீதத்தால் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்கக்கோரி இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த கோரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...