Ministry of Energy 56767
இலங்கைசெய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு?- அதிர்ச்சி தகவல்!!

Share

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தை சனிக்கிழமைகளில் நிறுத்தும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வணிக சேவை தொழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் செய்வதை நிறுத்துவதற்கு நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும், இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுகிறது,

இத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

நாட்டில் துறைமுகங்கள் உட்பட சில அத்தியாவசிய நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு குறிப்பிட்டதொரு கொள்ளளவே காணப்படுகிறது,

வாராவாரம் சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் பிரதி திங்கட்கிழமைகளில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம்.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...