11 17
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

Share

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு இலங்கை பெட்ரோலி கூட்டுதாபனத்திடம் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது, விலை திறுத்தம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் காரணமாகவே விலை திருத்தம் தொடர்பில் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில், ஜூலை 1 ஆம் திகதி வரை 82.38 டொலராக பதிவு செய்யப்பட்ட W.T.I. கச்சா எண்ளை நேற்று 75.30 டொலராக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...