VideoCapture 20220723 193405
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். கோண்டாவில் சாலையில் குழப்ப நிலை!

Share

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டோவில் டிப்போவில் டீசல் எரிபொருள்கிரமமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று(22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி இ போ ச.ஊழியர்கள் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கலை நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெங்காதரன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டிற்காக தனியார் சேவையினருக்கு எரிபொருள் வழங்க முடியாது எனக்கு கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்காக தனியார் பேருந்தினர் பாதிக்கப்படக்கூடாது எரிபொருள் வழங்கப்படாமைக்கு உரிய காரணம் மற்றும் தங்கு தடை இன்றி எரிபொருளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

இன்று மாலை வரை தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்து வண்டிகளை கோண்டாவில் சாலையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதோடு நாளை அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாவும் தமக்கு தொடர்ச்சியாக இலங்கையை போக்குவரத்து சபையின் கோண்டாவின் சாலையில் எரிபொருள் பெறுவதில் கடும் சிரமங்கள் எதிர்நோக்குவதாகவும் பிறிதொரு இடத்தில் எரிபொருளை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

எனவே நாளை அரசாங்க அதிபருடன் இடம்பெறும் சந்திப்பின் பின்னரே தனியார் பேருந்து சேவை பணிபுறக்கணிப்பா அல்லது சேவையை தொடர்ந்துஈடுபடுதா என தீர்மானிக்கப்படும் என யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத் தலைவர் கங்காதரன் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...