இந்தியாவிடமிருந்து எரிபொருள்! – ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம்

4R ALQ SriLankan Airlines Airbus A330 343 departing via Runway18 to Colombo CMB VCBI @ Frankfurt Rhein Main International FRA EDDF e1650030146435 1024x683 1

விமானங்களுக்கு எரிபொருளை வழங்காததன் மூலம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் விமானங்கள் இந்தியாவிடமிருந்து தேவையான எரிபொருளைப் பெறுவதால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்திற்கும் இது செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எண்ணெயினை நிரப்ப இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் கூடுதல் பயணம் என்றும் விமானத்தின் தேய்மானம் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 550,000 லீற்றர் விமான எரிபொருள் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version