இலங்கைசெய்திகள்

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்!!

Share
3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
Share

தமது பிராந்திய டிப்போக்கள் மற்றும் எரிபொருள் முனையங்களில் இருந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, 574 லோட்கள் 6,600 லீற்றர் ஓட்டோ டீசல் மற்றும் 512 லோட்கள் 6,600 லீற்றர் 92 ரக பெற்றோல் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் அனுப்பியுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை அறிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நேற்றும் இன்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் அனுப்ப தொடர்ந்து பணியாற்றிய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சேமிப்பு முனையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
.
பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து தேவையான பாதுகாப்பை அளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் உடனடியாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எந்த வளாகத்துக்குள்ளும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள 20 பேருக்கும் எதிராக மேலும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இடையூறுகளில் ஈடுபட்ட ஏனைய ஊழியர்கள் கண்டறியப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...