HelloTech qr code 1024x1024 1
இலங்கைசெய்திகள்

இன்று முதல் கியூ.ஆர். முறைக்கு எரிபொருள்!

Share

இன்று (01) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திரம் அல்லது கியூ.ஆர். முறையின் பிரகாரம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இன்று முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கிகள்,தோட்டக்கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களை பயன்படுத்துவோர் தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தெரிவு ஆகியவற்றை அந்ததந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து ஒவ்வொருவருக்குமான ஒதுக்கீட்டை பெறுவதற்கான சந்தர்ப்பம் வாரம் முழுவதும் கிடைக்கும். எனவே இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூட வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...

world 118
செய்திகள்உலகம்

போப் லியோவை கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் லியோ மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...

world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...