24 66a46755e0dd6
இலங்கைசெய்திகள்

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

Share

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

ஒலிம்பிக் (Olympics) போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் (Paris) முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள தொடருந்து பாதைகளை இணைக்கும் பிரான்சின் TGV அதிவேக தொடருந்து வலையமைப்பின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பிரான்சின் பல தொடருந்து பாதைகளில் தீமூண்டுள்ளதாக பிரெஞ்சு தொடருந்து நிறுவனமான (SNCF) தெரிவித்துள்ளது.

லீல். போர்தோ மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் போன்ற நகரங்களுடன் பாரிஸை இணைக்கும் சமிக்ஞை பெட்டிகளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து சேவைகளை செயல் இழக்கச் செய்யும் விதத்தில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் (France) பாரிஸ் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிரான்ஸ் – சுவிஸ் எல்லையிலுள்ள ‘Mulhouse’ விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர், அது போலியான மிரட்டல் என்பது தெரியவர, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...