mahinda amaraweera 6756
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திரக்கட்சி காணாமல் போய்விடும்!

Share

” மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களை கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீக்கியது.

இது தொடர்பில் வினவியபோதே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வகித்தவரும், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டவருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கட்சியின் முடிவு தொடர்பில் எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நான் இன்னமும் சுதந்திரக்கட்சியில்தான் இருக்கின்றேன். வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை.

சர்வக்கட்சி அரசாங்கம் யோசனையை சுதந்திரக்கட்சியே முன்வைத்தது. எனவே, நாட்டின் நலன்கருதியே நாம் அமைச்சரானோம்.

மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவான உறுப்பினர்களை நீக்கினால், சுதந்திரக்கட்சிக்கு எதிர்காலம் இருக்காது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...