அரசிலிருந்து வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெற்ற சு.கவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் சுதந்திரக்கட்சி ஊடாகவே நாடாளுமன்றம் தெரிவானார். அவரும் அரசில் இருந்து வெளியேறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment