WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம்!- கூறுகிறார் தயாசிறி

Share

கட்சியின் யாப்பு திருத்தம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அக் கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம் இருப்பதாலேயே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக உறுப்பினர்களால் சட்ட நடவடிக்கை நோக்கி நகர முடிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசாங்கம் அமையாவிட்டால், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என்ற முடிவை கட்சி எடுத்திருந்தது. அதனைமீறி உறுப்பினர்கள் செயற்பட்டனர். கடையில் கட்சிக்கு எதிராகவே நீதிமன்றத்தை நாடினர். சுரேன் ராகவன், சாந்த பண்டார ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. நிமல், அமரவீர போன்றவர்கள் நீக்கப்படவில்லை. இப்படி பாகுபாடு காட்ட முடியாது. எனவே ,கட்சியின் நலன் கருதியே யாப்பு திருத்தம் செய்யப்பட்டது.

குமார வெல்கம போன்றவர்கள்தான் சுதந்திரக் கட்சியை கூறுபோட்டனர். ” – என்றார் தயாசிறி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...