IMG 20220609 WA0032 e1654852077793
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

விமானம் மூலம் தமிழகம் சென்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமிழகத்தில் அகதி தஞ்சக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின் தட்டுப்பாடு காரணமாக நேற்று திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் புறப்பட்டு சென்னை ஊடாக இராமேஸ்வரத்தைச் சென்றடைந்தார்.

தனுஸ்கோடி ஊடாக வந்தார் என்று முதலில் மெரன் பொலிஸாரிடம் தெரிவித்தபோதும் பொலிஸாரின் விசாரணை மூலம் விமானம் மூலம் வந்தமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் சென்று அனுமதி பெற்று வருமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தினர்.

குறித்த நபர் 6 ஆண்டுகள் இலங்கைப் பொலிஸில் 6141 இலக்கத்தில் பணியாற்றினார் என்று விசாரணையின்போது தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை தமிழகத்துக்கு 84 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...