16
இலங்கைசெய்திகள்

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

Share

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோரப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழுவில் சிலர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை புறக்கணிப்பதற்கு தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...