ஊழல் குற்றத்தைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவினை இன்று (7) பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு முன் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.