22 1
இலங்கைசெய்திகள்

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன

Share

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன (Anuradha Lanka Jayaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நியமனம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியு்ளளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டிருக்கின்றார். எஞ்சியுள்ள ஒரு ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

ரவி கருணாநாயக்க அவரது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தமை சட்டத்தின்படி தவறல்ல. எனினும் அவர் அதனை முறையாக செய்தாரா என்பதே இங்கு பிரச்சினைக்குரியதாகவுள்ளது.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை தயாரித்து வருகிறது.

இவ்வாரத்தில் அந்த அறிக்கை முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அடுத்து இருப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதனை செய்யாவிட்டால் கட்சி தற்போதிருப்பதை விட படு பாதாளத்தில் விழும்.

அதேபோன்று சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) தலைமைத்துவத்தை மாத்திரம் கேட்டுக் கொண்டிருப்பதை விட, முந்தைய தலைவர்களைப் போன்று கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அரசியலமைப்பிற்கமைய ரணில் விக்ரமசிங்கவுக்கு 6 ஆண்டுகள் தலைமை பதவியை வகிக்க முடியும். ஆனால் அவர் விரும்பும் பட்சத்தில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...