இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு விபரீதம்

24 6610bece4141d

காலி – (Galle) ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச்சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

57 வயதான லிதுவேனியாவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

நீராடச் சென்ற வெளிநாட்டவர் நீரில் மூழ்கிய நிலையில், பொலிஸ் உயிர்காப்பாளர்களால் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version