பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலக குழுவினர் இந்த அதிகாரி தங்களை கைது செய்ய வந்துள்ளதாக அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் மறைந்திருந்த கெஹல்பத்தர பத்மே உட்பட 05 பாதாள உலக குழுவினர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலக குழுவினர் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், பத்மே தலைமையிலான பாதாள உலக குழுவினர் கைது செய்யப்பட்டதன் மூலம், தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரை சுட்டுக் கொல்லும் சூழ்நிலை குறைவடைந்துள்ளது.
தப்பி ஓடும் பாதாள உலக குழுவினரை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடுவோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதாள உலகக் குண்டர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இன்டர்போல் மூலம் அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்ட மூன்று பாதாள உலகக் குற்றவாளிகள் பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருந்த போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று பாதாள உலக குழுவினரும் பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாதங்களாக பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இரத்மலானையை சேர்ந்த ஐரேஷ் அசங்க, தேவுந்தர திலீப் ஹர்ஷன மற்றும் கோட்டஹேனே சுகத் ஆகிய 3 பாதாள உலகக் கும்பலை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று குற்றவாளிகளையும் எதிர்வரும் நாட்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய மத்திய குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.