கோட்டா அரசுக்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டம்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசுக்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்ப்பாட்டம்!

Share

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சி மாற்றத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைவாக காலி – கொழும்பு பிரதான வீதி, அக்குறல பாலத்துக்கு அருகில் இன்று காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான பதாதைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நடைமுறை காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...