rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

Share

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் அதிகாரம், விரிவான திருத்தங்களின் கீழ் ஜனாதிபதிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழு கொண்டிருக்கும்.

அதன்படி, ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ஐந்து பேரின் பெயர்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைப்பார்.

இதற்கமைய ஆணையத்தின் உறுப்பினராக ஒருவரின் பெயரை, நாடாளுமன்றம் அங்கீகரிக்க மறுத்தால், அரச தலைவர் புதிய நியமனத்தை வழங்குவார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரை நீக்கும் விடயத்தில் கூட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மட்டுமே ஜனாதிபதி அதைச் செய்ய முடியும்.

இந்த மாற்றங்கள், யோசனையின், அசல் வரைவில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும் இந்தநிலையில்,மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை அதிகம், வேறு எந்தவொருவரின் மத உணர்களை காயப்படுத்துவது, இரகசியத்தன்மையை பாதுகாப்பது, இலங்கைக்கு வெளியே குற்றங்களை செய்வோருக்கான ஏற்பாடுகள் போன்ற விடயத்திலேயே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திருத்தங்களை ஆய்வு செய்த நீதியரசர், குறித்த சில சரத்துக்களை தவிர, யோசனையின் மற்ற விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இல்லை என்பதை அவதானித்துள்ளனர்.

ஆகவே, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...