rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

Share

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் அதிகாரம், விரிவான திருத்தங்களின் கீழ் ஜனாதிபதிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திருத்தங்களின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை ஆணைக்குழு கொண்டிருக்கும்.

அதன்படி, ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ஐந்து பேரின் பெயர்களை ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைப்பார்.

இதற்கமைய ஆணையத்தின் உறுப்பினராக ஒருவரின் பெயரை, நாடாளுமன்றம் அங்கீகரிக்க மறுத்தால், அரச தலைவர் புதிய நியமனத்தை வழங்குவார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரை நீக்கும் விடயத்தில் கூட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு மட்டுமே ஜனாதிபதி அதைச் செய்ய முடியும்.

இந்த மாற்றங்கள், யோசனையின், அசல் வரைவில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும் இந்தநிலையில்,மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை அதிகம், வேறு எந்தவொருவரின் மத உணர்களை காயப்படுத்துவது, இரகசியத்தன்மையை பாதுகாப்பது, இலங்கைக்கு வெளியே குற்றங்களை செய்வோருக்கான ஏற்பாடுகள் போன்ற விடயத்திலேயே மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனை திருத்தங்களை ஆய்வு செய்த நீதியரசர், குறித்த சில சரத்துக்களை தவிர, யோசனையின் மற்ற விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இல்லை என்பதை அவதானித்துள்ளனர்.

ஆகவே, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...