1761682581
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: ஐவரின் திட்டத்திற்கமைய இடம்பெற்றது அம்பலம் – இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 பேர் சதியில் பங்கேற்பு!

Share

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை, ஐந்து பேரின் திட்டத்திற்கமையவே இடம்பெற்றுள்ளமை காவல்துறையினரின் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போதே இந்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பத்மே, கொமான்டோ சலிந்த, தருண், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிதாரியாக செயற்பட்ட சமிந்து டில்ஷான் ஆகியோர் இந்த கொலையைத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க அறைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...