24 669b2e6cac038
இலங்கைசெய்திகள்

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

Share

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

தெஹிவளைகாலி வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களினால் திருடப்பட்ட பொருட்களிலிருந்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இத்தாலி விசா பெறுவதற்காக நால்வர் பணம் செலுத்தியிருந்த நிலையில், விசா வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென நிறுவனத்திற்குள் புகுந்த சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி சேதம் விளைவித்து 2000 ஸ்ரெலிங் பவுண்ட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25-33 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில்,தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...