ருவான் விஜேவர்தன
அரசியல்இலங்கைசெய்திகள்

எரிபொருள் கேட்டால் துப்பாக்கிச் சூடு! – ருவான் விசனம்

Share

“பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒருபோதும் பாதுகாக்கப்படாது.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு வெளியேறியதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தற்போதைய தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெறும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி அனைத்து இலங்கையர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு தீர்வைக் கோருகின்றனர் என்று தெரிவித்த அவர், நேற்று நாடெங்கும் மக்கள் வீதிக்கு இறங்கியமைக்குக் காரணம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே எனவும் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்களின் இந்தக் கோரிக்கைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி...