யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் ‘கோத்தபாய வீட்டுக்கு போ’ என கோசமெழுப்பியவாறு கடந்த ஏழு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் போராட்டத்தில் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment