வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களால் கடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் 750,600 பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஐஸ்கிரீம் வகைகள், மென்பாணப் பொருட்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டி அடங்கலாக 40 லீட்டர் தேங்காய் எண்ணெய் என்பன இவ்வாறு களஞ்சியசாலையில் இருந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர் தற்பொழுது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்.
கடை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment