IMG 20220605 WA0026 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இயக்கச்சி காணியில் தீ! – பயன்தரு மரங்கள் நாசம்!

Share

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன் தருகின்ற தருவாயில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் பல தென்ணைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீப்பரவல் தொடர்பாக பிரதேசவாசிகள் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரிவித்ததை அடுத்து கரைச்சி பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் தீப் பரவல் குறித்த காணியில் காணப்பட்ட பனை மரங்களில் பரவியதால் பனைமரங்களில் ஏற்பட்ட தீ பயன்தரு தென்னை மரங்களில் பரவி தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

இதனால் குறித்த காணி உரிமையாளர்கள் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

IMG 20220605 WA0025

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...