image cb6b371e3f
இலங்கைசெய்திகள்

எண்ணெய் இறக்குமதி முகவராக கூறி நிதி மோசடி!! – திலினி மீது குற்றச்சாட்டு

Share

எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி பல மில்லியன் மோசடி – குற்றப்புலனாய்வுப் பிரிவு தகவல்
நாட்டில் உள்ள பல்வேறு கோடீஸ்வர வர்த்தகர்களிடம் பல மில்லியன் ரூபாக்களை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி, எண்ணெய் நெருக்கடியின் போது இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வரும் முகவராக நடித்து வர்த்தகர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் முகவராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டொலர் நெருக்கடியால் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு டொலர்களை தருவதாகவும், இலங்கைக்கு எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் அதனை விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்டலாம் எனவும் கூறி வியாபாரிகளிடம் சந்தேக நபர் ஏமாற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரின் வாக்குமூலத்தின் படி பல வர்த்தகர்கள் அவருக்கு டொலர்களை வழங்கியுள்ளதாகவும், அவர் வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்ட டொலர்களை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

60,000 அமெரிக்க டொலர்கள், 136 பவுண்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வர்த்தகர் ஒருவர் கொடுத்துள்ளார். இரண்டு நாட்களில் இலாபத்துடன் பணத்தை தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டதாக வர்த்தகர் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...