நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பெண் கைதிகள் பிரிவில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புகள் மற்றும் வெளியே மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#SriLankaNews
Leave a comment