24 665a0a4bcaa28
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: அனுமதி தொடர்பில் தகவல்

Share

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: அனுமதி தொடர்பில் தகவல்

இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்தவாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Ganaka Herath)தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதிகளை வழங்கும் சேவைகளுக்காக இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் அதற்கு தேவையான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

உலகின் பணக்கார மற்றும் வெற்றிகரமான தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ் x திட்டத்தின் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்கப்பட்டது.

ஸ்டார்லிங்க் திட்டத்தின் மூலம், ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிவேக தரவு பரிமாற்றமானது செயற்கைக்கோள் மூலம் மணிக்கு சுமார் 27,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது.

ஸ்டார்லிங்க் மூலம், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் இணைய பயனர்கள் இணையத்தை அணுக முடியும்.

2024 ஆம் ஆண்டில், 5,874 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருக்கும், அதில் 5,800 செயற்கைக்கோள்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவை வசதியை இலங்கையில் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரவலாக பேசப்பட்டது.

அந்த சந்திப்பில், இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...