tamilni 283 scaled
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் சர்ச்சைகள்

Share

நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் சர்ச்சைகள்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடங்களாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஜனாதிபதி பதவிக்கும்; அரசியலமைப்பு சபைக்கும் இடையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

அதாவது நீதியரசர் புவனேக அலுவிஹாரே ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நீதியரசர் நிஸ்ஸங்க கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக உயர்த்தியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை வரை, சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, ஜனாதிபதியின்; பரிந்துரை குறித்து முடிவு செய்யவில்லை எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நவம்பர் 14ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர்கள் தொடர்பில் தனது கருத்துக்களைக் கோரி எழுதிய கடிதம், ஜனாதிபதி பதவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதியரசரின் செயல்திறன், உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புகள். சம்பந்தப்பட்ட நீதியரசர்களின் நடத்தை மற்றும் சட்ட நீதித்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு போன்றவை தொடர்பிலேயே சபாநாயகர், பிரதம நீதியரசரின் கருத்துக்களை கோரியுள்ளார் எனினும் இந்த கோரிக்கை கடிதத்தில் நீதியரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாததால் தெளிவின்மை உள்ளது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு இது தெளிவாகத் தெரிந்தாலும், அவர் செய்த சமீபத்திய பரிந்துரைகளே அடுத்தே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு , கடிதம் அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்த விடயம், அரசியலமைப்பு பேரவையில் விவாதிக்கப்பட்டதாக, அடையாளம் காட்ட விரும்பாத அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...