16 11
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Share

நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெரும் போகத்தின் போது, அரசாங்கம் ரூ. 25,000 உர மானியத்தையும் இலவச சிவப்பு தூள் உரத்தையும் வழங்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, 2024 ஒக்டோபர் 01 முதல் 2025 பெப்ரவரி 01 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரூ. 25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல் தவணை ரூ. 15,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பயனுள்ள அமைப்பை செயல்படுத்த அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக...

1744006431 namal cid 6
செய்திகள்இலங்கை

“திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு அரசுப் பாதுகாப்பில் இடமளிக்க வேண்டாம்”: நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் (SLPP)...

25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

images 7
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – லெபனான் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை அவசியம்: லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் வலியுறுத்தல்!

இஸ்ரேலுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இரு தரப்புக்களுக்குமிடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும்...