17 11
இலங்கைசெய்திகள்

2025 ஆண்டுக்கான அநுர அரசின் மொத்த செலவுத் தொகை வெளியானது!

Share

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்திற்கான அரசாங்கத்தின் செலவு ரூ. 4,616 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய (இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய தொகை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது 713 பில்லியன் ரூபாய் ஆகும்.

அத்தோடு, இந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 2,518 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 354 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகளுக்கு ரூ. 412 மில்லியன் என்பதுடன், அதற்கான மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு ரூ. 95,500 மில்லியன் ஆகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 3,673 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 528 மில்லியனாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...