Tharmalingam Sitharthan
இலங்கைஅரசியல்செய்திகள்

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகள் அவசியம்- சித்தார்த்தன்

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இன்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் உட்பட மேலும் பல காரணங்களால் வடக்கு, கிழக்கில் சுமார் ஒரு லட்சம்வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.

அக்குடும்பங்களுக்கு வாழ்வாதார வழிகள் இல்லை. கொரோனா தொற்று நெருக்கடியால் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு செய்திருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு சாதாரண மக்களிடம் பணம் இல்லை.

எனவே, இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஏதாவது உதவித் திட்டங்களை நிதி அமைச்சர் வழங்க வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...

04 3
செய்திகள்விளையாட்டு

அபிஷேக் சர்மா வெறும் ‘ஸ்லோகர்’ அல்ல, யுவராஜ் சிங் போன்ற திறமையாளர்: முகமது அமீருக்கு அஸ்வின் பதிலடி!

இந்திய அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா தொடர்பாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து...

03 2
இந்தியாசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: சுரேஷ் சலே மீதான 5 முக்கிய குற்றச்சாட்டுகள் வெளியீடு – PTA-வின் கீழ் விசாரணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின்...

02 2
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் பலகட்சி ஜனநாயகத்திற்கு ஆபத்து: ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மீது கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் பலகட்சி ஆட்சி முறையை அழித்து, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக...