8f91fb36 b303c494 8f6cd2ab threewheel
இலங்கைசெய்திகள்

கட்டணங்கள் குறைக்கப்படாது!

Share

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை அரசாங்கம் இரட்டிப்பாக்கிய போதும், கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் 5 லீற்றர் அடிப்படையில் 6 நாட்களுக்கு 30 லீற்றர் பெற்றோல் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதும் 5 லீற்றர் பெற்றோல் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உராய்வு நீக்கி எண்ணெய், டயர்கள், டியூப்கள், பட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால், சேவையைத் தொடர இந்த அதிகரிப்பு உதவாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

480 ரூபாயாக இருந்த பெற்றோல் 3 தடவைகளில் 370 ரூபாய் வரை குறைக்கப்பட்ட போதும் தமக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படாமை காரணமாக கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றும் சங்கம் தெரிவித்தது.

மேல் மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதலும் ஏனைய மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 6ஆம் திகதி முதலும் 10 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...